காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக முதல்-மந்திரி இவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி சிக்கலைப் பொறுத்தவரை மத்தியில் ஆளும் அரசுகள் கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த துணிச்சலில் தான் எடியூரப்பா போன்றவர்கள் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கு எள் முனையளவும் வாய்ப்பு இல்லை என்றநிலை ஏற்படுத்தப்பட்டால்தான் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் நிம்மதியாக இருக்க முடியும். எனவே, மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com