கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்

சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்
Published on

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசியிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெற இருக்கிறது.

தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com