"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்
Published on

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் வலியுறுத்தியுள்ளார். ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு அவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று, சென்னையில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையத்துடன், ரெயில் நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com