

கரூர்,
கரூர் மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றில் இன்று முன்னோருக்கு திதி கொடுக்க பலர் குவித்திருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 3 அர்ச்சகர்கள் திதி கொடுப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர்.
ஆற்றில் இறங்கி சடங்குகளில் ஈடுபட்டிருந்தபோது 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.