'உங்களால் தோற்றோம்' என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது- சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்

'உங்களால் தோற்றோம்' என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்திற்கு கே.டி.ராகவன் பதில் அளித்து உள்ளார்.
'உங்களால் தோற்றோம்' என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது- சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்
Published on

சென்னை

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க .கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜனதா 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைக்குள் நுழைந்து உள்ளது

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு, பா.ஜனதாவுடனான கூட்டணியே காரணமே என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், இதற்கு பா.ஜனதா வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் டுவிட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

சி.வி.சண்முகத்தின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ள கே.டி.ராகவன், அ.தி.மு.க.வால்தான் பா.ஜனதா தேற்றது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com