கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைப்பு: கேரளாவில் பதுங்கிய பெண், கள்ளக்காதலனுடன் கைது

கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, கேரளாவில் பதுங்கிய இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைப்பு: கேரளாவில் பதுங்கிய பெண், கள்ளக்காதலனுடன் கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 3-ந்தேதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடாபு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது நான் நேரில் வருகிறேன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் அவரது மாமனார்.

வீட்டு தோட்டத்தில்உடல் புதைப்பு

அதன்படி சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் சகாயராஜிக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது, அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை போலீசார், தோண்டி பார்த்த போது லியோபால் புதைக்கப்பட்டு பிணமாக இருந்தார்.

கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

கேரளாவில் பதுங்கல்

தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.

கைதான ராதாகிருஷ்ணன் போலீசார் அளித்த வாக்குமூலத்தில், ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொலை செய்த பாணியை பின்பற்றி லியோபாலை தீர்த்து கட்டினேன் என்று கூறியுள்ளார். அந்த கொலை குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com