கோடநாடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கோடநாடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
Published on

புதுடெல்லி,

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சாதாரண சம்பவங்கள் அல்ல. இதற்கும், மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

எனவே, இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்காமல் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com