கொடுவா மீன், கடற்பாசி உற்பத்தி

கொடுவா மீன், கடற்பாசி உற்பத்தி
கொடுவா மீன், கடற்பாசி உற்பத்தி
Published on

தொண்டி

திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் இயங்கி வரும் "ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை" திட்டத்தின் ஒரு பகுதியாக கொடுவா மீன், உவர்நீர் சிப்பி மற்றும் கடற்பாசி முதற்கட்டமாக அறுவடை செய்யப்பட்டது. மேலும் அறுவடை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விஞ்ஞானி செந்தில் முருகன், தலைமை வகித்தார். இதில் 115 பயனாளிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் கார்மேல் மேரி செங்கோல் மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com