

கோட்டைப்பட்டினம் மற்றும் மீமிசல் பாலீஸ் நிலையங்களில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் நிலையங்களில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு காவலர்களுக்கு சிறப்புரை வழங்கினார். இந்த ஆய்வின் போது கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.