கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ரூ.1 கோடி கேட்ட கே.பி.முனுசாமி -ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ரூ.1 கோடி கேட்ட கே.பி.முனுசாமி -ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
Published on

சென்னை,

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

ஆடியோவில், முதலில் 50 தயார் செய்துள்ளேன், மாலைக்குள் மீதி 50 - யை தயார் செய்கிறேன் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி. முனுசாமியிடம் கூறுகிறார். பின், பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுகிறார்.

இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கேபி முனுசாமி என்னிடம் ரூ.1 கோடி கேட்டார். ஈபிஎஸ்-க்கு இது தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால்

தற்போது இதை வெளியிடுகிறேன். கேபி முனுசாமி ஆடியோவை இப்போது வெளியிட்டுள்ளேன், அமைதியாக இல்லை என்றால் வீடியோ வெளியிடுவேன். எனது ஆடியோவுக்கு பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவை வெளியிடுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com