

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பி.உடையாப்பட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான குறுவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசு பெற்றனர். இதையடுத்து அவர்கள் கரூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள கபடி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.