முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை

முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை நடைபெற்றது.
முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
Published on

வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு புனித நீ, இளநீ, பன்னீ, பால், தயி, தேன், பஞ்சாமிதம், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் தவிட்டுப்பாளையம் அருகே உள்ள நஞ்சைபுகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com