முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு

முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு
முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு
Published on

வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் என்.சி.சி.10-வது பட்டாலியன் ராணுவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெறும் 3-ம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் பயிலும் மாணவர் பாலாஜி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின அமுதப்பெருவிழாவில் அணிவகுப்பில் கலந்து கொண்டார். அவரை கல்லூரி முதல்வர் மலர் பாராட்டி பரிசு வழங்கினார். இதில் இயற்பியல் துறை தலைவர் மாரிமுத்து, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சீனுவாச குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com