குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
Published on

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 2 ஆண்டுகளாக பயின்று கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களில் அருண்குமார், செந்தில்ராஜன், ராஜராஜேஸ்வர் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நினைவு பரிசாக நூல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சமூக நலத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com