குலையன்கரிசல்பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா

குலையன்கரிசல் பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
குலையன்கரிசல்பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா
Published on

சாயர்புரம்:

குலையன்கரிசல் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளிஅம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சப்பரபவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு வில்லிசை, திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, நையாண்டி மேளத்துடன் கரக ஆட்டம், முளைப்பாரி எடுத்தல் நடந்தது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com