தமிழகம் திரும்பிய குமரி மீனவர்கள் - விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்பு...!

செசல்ஸ் தீவு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் தமிழகம் திரும்பி உள்ளனர்.
தமிழகம் திரும்பிய குமரி மீனவர்கள் - விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்பு...!
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை மீனவர் கிராமங்களை சேர்ந்த 61 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள செசல்ஸ் தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் முயற்சியால் 56 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 5 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி ரூபலா, இணை மந்திரி எல்.முருகன், வெளிவுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் முயற்சியால் 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் மீனவரணி தலைவர் முனுசாமி, துணை தலைவர் கொட்டிவாக்கம் மோகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com