

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி, மரக்கடையில் வின்னரசி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.