தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

அம்பையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

அம்பை:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோமதி விநாயகம் (40). நெசவு தொழிலாளி. இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 40 பேருடன் வேனில் நேற்று முன்தினம் அம்பை பகுதிக்கு சுற்றுலா வந்தார். அம்பை சின்ன சங்கரன்கோவில் மேற்கு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது திடீரென கோமதி விநாயகத்தை காணவில்லை. தகவல் அறிந்த அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் கோமதிநாயகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று காலை அவர்கள் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பாது சிறிது தொலைவில் கோமதி விநாயகம் பிணமாக மீட்கப்பட்டார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை அம்பை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com