உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

" நான் இறக்கப்போகிறேன்" என்று உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தாராபுரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

இது குறித்து பாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வி.எம்.கே. நகர் பார்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களது மகள் ஸ்வேதா (வயது 21). கருத்து வேறுபாடு காரணமாக பழனிசாமி-ராஜாமணி பிரிந்தனர். அதன்பின்னர் ராஜாமணி தனது மகளுடன் பார்க் ரோடு பகுதியில் வசித்து வந்தார். ஸ்வேதா அங்குள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். ஸ்வேதா மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா அவருடைய அறையிலும், தாய் ராஜாமணி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். அதிகாலை 3 மணிக்கு பழனியில் உள்ள தாய் மாமன் மகளுக்கு "நான் இறக்க போகிறேன்" என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

காலையில் எழுந்த ஸ்வேதாவின் தாய் மாமா மகள் அந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ந்து போய் அத்தையான ராஜாமணிக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. அப்போது அருகில் உள்ளவர்களுக்கு கொடுத்தார். அப்போது ராஜாமணி எழுந்து மகள் ஸ்வேதா அறையின் கதவைத் தட்டி உள்ளார். அப்போது கதவை திறக்காததால் அருகில் உள்ளவர்களை அழைத்து தாழிட்ட கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்வேதா தூக்கில் பிணமாக தொங்கியவாறு இருந்ததை கண்டு தாய் கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்வேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com