சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விருத்தாசலம்:

தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் மாநில செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பாலமுருகன், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் அரசு அச்சகம் பின்புறம் சலவை தொழிலாளர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனையை வழங்காமல் காலதாமதம் செய்து வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருத்தாசலம் வருவாய் துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தே.மு.தி.க. நகர தலைவர் சங்கர், செயலாளர் ராஜ்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் சேகர், ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன், சட்ட ஆலோசகர் குணசேகரன், சமூக ஆர்வலர்கள் குணசேகரன், தடயம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டு சலவை தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சலவை தொழிலாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com