விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அர்ஜுன் சம்பத் உருவ பொம்மை எரித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவாக பேசி வரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். நகராட்சி கவுன்சிலர் வெற்றிகொண்டான் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளர் கலா, கோகுல் அமர்நாத், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அர்ஜுன் சம்பத்தின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com