மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை விதித்து அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
Published on

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் செல்வகுமார்(வயது 36). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், விறகு பொறுக்கிக்கொண்டு இருந்த வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதன்பின் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் தாய் கடந்த 2019-ம் ஆண்டு இதுகுறித்து ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாழ்நாள் சிறை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளியான செல்வகுமார் வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com