இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன்-கொழுந்தனுக்கு ஆயுள் சிறை

நெல்லை அருகே, இளம்பெண்ணை வெட்டி கொலை செய்த கணவன்-கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
Published on

நெல்லை அருகே, இளம்பெண்ணை வெட்டி கொலை செய்த கணவன்-கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இளம்பெண் கொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகே மணக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுடலை நயினார் (வயது 37). இவருடைய மனைவி வெயிலாட்சி (29).

சுடலை நயினாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் வெயிலாட்சி அதனை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுடலை நயினார், தனது தம்பி ஆயிரம் (27) என்பவருடன் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வெயிலாட்சியை வெட்டிக்கொலை செய்தார்.

வழக்கு விசாரணை

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலை நயினார், ஆயிரம், தாய் வசந்தா (68) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

நேற்று இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த விஜயகுமார் அவதூறாக பேசியதற்காக சுடலை நயினார், ஆயிரம், வசந்தா ஆகியோருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனையும், கொலை குற்றத்திற்காக சுடலை நயினார், ஆயிரம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக சுடலை நயினார், ஆயிரம் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், பெண்கள் வன்கொடுமை தடை சட்டத்தில் சுடலை நயினார், ஆயிரம் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜர் ஆனார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com