மது குடிக்க பணம் தர மறுத்த தாயை எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

மது குடிக்க பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதனை 40 ஆண்டு காலம் அனுபவிக்கும் வரை வெளியில் விடக்கூடாது என புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
மது குடிக்க பணம் தர மறுத்த தாயை எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜின் மனைவி லீலாவதி(வயது 56). இவரது மகன் சந்தோஷ்குமார்(26). இவர், சிப்காட் பகுதியில் சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி அன்று சந்தோஷ்குமார் மது குடிக்கவும், அடமானத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை மீட்கவும் பணம் தருமாறு தாய் லீலாவதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், தாய் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சந்தோஷ்குமார் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக தண்டனையை குறைத்து சிறையில் இருந்து விடுவிக்க கூடாது என அரசுக்கு அறிவுறுத்தினார். தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக 3 மாத காலம் அவரை தனிமை சிறையில் அடைக்க வேண்டும். இந்த தண்டனையை ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் 5 நாட்கள் அனுபவிக்க வேண்டும். இதனை 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com