நாளை மறுநாள் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் லேசான மழைக்கு வாய்ப்பு
Published on

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீட்டரும், 23-ந் தேதி 2 மி.மீட்டரும், 24-ந் தேதி 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

லேசான மழைக்கு வாய்ப்பு

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நாளை மறுநாள் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயிற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள்வதோடு, கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். மேலும் தீவனத்தில் வைட்டமின்-சி, நுண்ணூட்ட கலவையை உபயோகிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com