சாராய வியாபாரி கைது

மங்கலம் அருகே சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சாராய வியாபாரி கைது
Published on

திருவண்ணாமலை

மங்கலம் அருகே சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது செட்டியந்தல் ஏரிக்கரை பகுதியில் எரி சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த கீழ்பென்னாத்தூர் கருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 420 லிட்டர் எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com