தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

மதுரை - ரூ.52.73 கோடி,

சென்னை - ரூ.48.12 கோடி

கோவை - ரூ.40.20 கோடி

திருச்சி - ரூ.40.02 கோடி-

சேலம் - ரூ.39.78 கோடி

நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

திருச்சி - ரூ.55.60

சென்னை - ரூ.52.98

மதுரை - ரூ.51.97 கோடி

சேலம் - ரூ.46.62 கோடி

கோவை - ரூ.39.61 கோடி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com