மது விற்றவர் கைது

நாகர்கோவிலில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று நாடான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்குடியிருப்பை சேர்ந்த சார்லஸ் (வயது 54) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சார்லசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com