மது விற்றவர் கைது

மது விற்றவரை போலீசார் கைது செய்தனா
மது விற்றவர் கைது
Published on

ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் நேற்று காலையில் வெள்ளமடம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேப்படும் வகையில் நின்ற ஒருவரை விசாரணை நடத்தினர். விசாரணையில் வெள்ளமடம் அருகே உள்ள புதுகல்விவிளையை சேர்ந்த முருகன்(வயது61) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com