காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியல்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்பிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #CauveryManagementCommission
காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியல்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
Published on

புதுடெல்லி,

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசிதழில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் ஒருவரும், 2 முழுநேர உறுப்பினர்களும், 6 பகுதிநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் தலைவரையும், 2 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். மீதம் உள்ள 4 பகுதி நேர உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரைக்க வேண்டும்.

இதன்படி, தமிழகம் சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் ஆகிய 2 பிரதிநிதிகரளையும் நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா சார்பில் எந்த பிரதிநிதிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12-ந் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்க மத்திய அரசு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com