உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம்

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.
உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம்
Published on

குத்தாலம்:

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்குட்பட்ட கோமல், அனந்தநல்லூர், கங்காதரபுரம், கொத்தங்குடி, மருத்தூர்,கொழையூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளுக்கான பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று கோமலில் நடந்தது. கூட்டத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் பேசிய கலெக்டர் மகாபாரதி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

மேலும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறினார். முன்னதாக கோமல் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக் கொண்டார்.

அப்போது குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர் கஜேந்திரன் குத்தாலம் தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் ராஜன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர், வார்டு உறுப்பினர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com