மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

தூத்துக்குடி ஊரக கோட்டத்திற்கு உட்பட்ட வாகைகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வாகைகுளம் உபமின் நிலையம் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிப்பட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு. முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செயற்பொறியாளர் (ஊரகம்) முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com