விபத்தில் லாரி டிரைவர் பலி

மோகனூர் அருகே விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்.
விபத்தில் லாரி டிரைவர் பலி
Published on

மோகனூர்

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). லாரி டிரைவர். இவருக்கு ஜெயந்தி (42) என்ற மனைவியும், 2 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது சொந்த ஊரான வளையப்பட்டியில் வசித்து வரும் தனது தாயாரை பார்ப்பதற்காக வகுரம்பட்டியில் இருந்து வளையப்பட்டி நோக்கி மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி சாலையில் உள்ள குரும்பபட்டி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com