லாரி திருடியவர் கைது

கங்கைகொண்டான் அருகே லாரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி திருடியவர் கைது
Published on

கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அலெக்சாண்டர் அவருடைய வீட்டிற்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை.

இதுகுறித்து அலெக்சாண்டர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், லாரியை திருடி சென்றது மேலஇலந்தகுளம், பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவமணி (29) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் தவமணியை நேற்று கைது செய்து அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com