லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி விற்றவர் கைது
Published on

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் நேற்று வண்டிச்சோலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் வண்டிச்சோலை பெல்லட்டி பகுதியை சேர்ந்த அருளேஸ்வரன் (வயது 34) என்பதும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com