லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கீழப்பாவூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசா கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி பூபாலசமுத்திரபுரம் தெருவை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). இவர் நேற்று கீழப்பாவூர் பால் பண்ணை தெருவில் உள்ள ஒரு கடை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் சேவியரை கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் 1440 மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com