விருதுநகர்: ஓடும் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை...!

விருதுநகரில் காதல் தோல்வியால் ஓடும் ரெயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்: ஓடும் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை...!
Published on

விருதுநகர்,

விருதுநகரில் காதல் தோல்வியால் ஓடும் ரெயில் முன் பாய்ந்து செவிலியர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது காதலரும் சிறிது நேரத்தில் மற்றோரு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

செவிலியர் பள்ளி மாணவி

விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் சோலை மீனா (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சிப்பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்த நிலையில் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியிலும் பகுதிநேர பணியாற்றி வந்துள்ளார். செவிலியர் பயிற்சி பள்ளி விடுதியிலேயே தங்கி படித்ததோடு பணியாற்றி வந்துள்ளார்.

இவரும் சாத்தூர் அருகே உள்ள சிறு குளத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் அதனுடன் இணைந்த தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருபவர்களால் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் இணைய முடியாது என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் சோலைமீனா மிகுந்த விரக்தியில் இருந்த நிலையில் பிரவீன்குமார் அவருக்கு ஆறுதல் கூறிதேற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ரெயில் பாதையில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சோலை மீனாவின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோலை மீனா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேள்வியுற்ற பிரவீன் குமார் இன்று காலை 11 மணிக்கு விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள ரெயில் பாதையில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பாய்ந்தார். ஆனால் படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரவீன்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசாரும், விருதுநகர் ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com