சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உருவப்படம் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் திருவுருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உருவப்படம் திறப்பு
Published on

சென்னை,

அதிமுகவின் கழக அவைத்தலைவராக இருந்தவர் மதுசூதனன். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 6-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடசென்னையில் அதிமுகவின் முகமாக இருந்தவர் மதுசூதனன். அமைச்சர், அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

இந்த நிலையில் மதுசூதனனை கவுரவிக்கும் விதமாக, அதிமுக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், மதுசூதனனின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு மதுசூதனனின் உருவப்படத்தை திறந்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com