மதுரை: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோவின் பின்னால் மோதியது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






