குற்றாலத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

‘நந்தவன திட்டம்’ குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
Published on

மதுரை,

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து, நீர்வரத்து சீரான நிலைக்கு வந்துள்ளது.

குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புலி அருவி மற்றும் சிற்றருவியில் பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

அதோட், ‘நந்தவன திட்டம்’ குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றாலத்தில் உள்ள கடைகளில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவி பகுதிகளில் 72 கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com