பராமரிப்பு பணி: சென்னையில் மே 22ம் தேதி மின்தடை


பராமரிப்பு பணி: சென்னையில் மே 22ம் தேதி மின்தடை
x

மே 22ம்தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை ஆவடி பகுதியில், ஆவடி சோதனைச் சாவடி, என்.எம்.சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேருநகர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (22.5.2025, வியாழன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story