திரிசூலம் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை

திரிசூலம் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திரிசூலம் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
Published on

சென்னையை அடுத்த திரிசூலம் இலுப்பை தோப்பு தெரு அருகிலுள்ள கல்குவாரி குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் மிதப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார், தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் குட்டையில் மிதந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரே குட்டையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக்கொன்று விட்டு உடலை குட்டையில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com