நெல் கொள்முதல் நிலைய முறைகேடு விவகாரம்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விடுத்த எச்சரிக்கை

முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எச்சரித்துள்ளது.
நெல் கொள்முதல் நிலைய முறைகேடு விவகாரம்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விடுத்த எச்சரிக்கை
Published on

சென்னை,

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கையூட்டு பெறுவதாக புகார்கள் வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முந்தைய மாதங்களில் இதுபோன்று வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், முறைகேட்டில் ஈடுபட்ட 90 நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 விழிப்பு பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதிரடி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் கள ஆய்வுகள் மேற்கொண்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில், முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com