சென்னையில் மகனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
சென்னையில் மகனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது
Published on

சென்னை,

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் வசிப்பவர் விவேகானந்தர் (வயது 50). அட்டை கம்பெனியில் வேலை செய்து வரும் இருவக்கு மனைவி மற்றும் உதயகுமார் (20) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த விவேகானந்தர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட மகன் உதயகுமாரை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த உதயகுமார் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விவேகானந்தரை நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com