நெல்லை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் செல்போனை ஒரு நபர் திருடியுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம், அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தென்காசி மாவட்டம் அச்சன்புதூரை சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்பவருடைய செல்போனை கடையம் பகுதியை சேர்ந்த சபரிஸ்வரன்(41) என்பவர் திருடியுள்ளார்.

இது தொடர்பாக தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சபரிஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com