சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்பவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்
Published on

சென்னை,

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் போலீசாரை ஏமாற்றி விட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கைதி ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய கைதியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com