தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு - ரெயில்வே போலீசார் விசாரணை

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு - ரெயில்வே போலீசார் விசாரணை
Published on

திருவள்ளூர் அடுத்த பட்டாபிராம் திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற ரெயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com