மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்வு

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்தது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்வு
Published on

தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து ஏற்படும். நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் கடந்த மாதம் 30-ந்தேதி வரை அணை நீர்வரத்து இன்றி காணப்பட்டது. அப்போது நீர்மட்டம் 47.95 அடியாக இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, நேற்று அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உயர்ந்தது. வெளியேற்றம் ஏதும் இல்லை. நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி வழக்கம்போல் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com