தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: சிவகங்கை போலீஸ்காரருக்கு, சூப்பிரண்டு பாராட்டு

தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிவகங்கை போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டி வாழ்த்தினார்.
தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: சிவகங்கை போலீஸ்காரருக்கு, சூப்பிரண்டு பாராட்டு
Published on

அகில இந்திய அளவில் போலீசாருக்கான ஆணழகன் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் சிவகங்கை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற போலீஸ்காரர் சிவாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com