நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று தாமிர சபையில் நடராஜ பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சமேதராக வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதனையடுத்து நெல்லையப்பர் கோவில் திருக்கோவில் 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான், திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாலை நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com