

நெல்லை,
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று தாமிர சபையில் நடராஜ பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சமேதராக வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதனையடுத்து நெல்லையப்பர் கோவில் திருக்கோவில் 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான், திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாலை நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.